திருச்சி; உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ஊஞ்சல் திருநாள் டோலோத்ஸவம் நான்காம் திருநாளில் ஏராளமாவன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் உப கோவில் ஆகும். 108 வைணவ திருத்தலங்களில் 2 வது திவ்விய தேசமாக திகழ்கிறது திருச்சி மாநகரின் மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்த பெருமையும் இக்கோவில் பெற்றுள்ளது. இக்கோவிலில் ஊஞ்சல் திருநாள் (டோலோத்ஸவம்;) விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நான்காம் நாள் அம்பாள் புறப்பாடு, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.