Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ... கோவை கோதண்டராமசுவாமி கோவிலில் மார்கழி உபன்யாசம் நாளை துவக்கம் கோவை கோதண்டராமசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கடற்கரையில் மீண்டும் மண் அரிப்பு; புனித நீராட பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கடற்கரையில் மீண்டும் மண் அரிப்பு; புனித நீராட பக்தர்கள் தவிப்பு

பதிவு செய்த நாள்

15 டிச
2025
10:12

 துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் தொடர்ந்து மண் அரிப்பு அதிகரித்து வருவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் தவித்து வருகின்றனர்.


திருச்செந்துார் சுப்ர மணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள் என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் நேற்று வழக்கத்தைவிட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசை, பௌர்ணிமி நாட்களில் கடல் உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சில நாட்களாகவே கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், கோவிலை ஒட்டிய கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு சுமார் 6 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் புனித நீராட செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடல் சீற்றத்துடன் உள்வாங்கியும் காணப்படுவதால் புனித நீராடும் பக்தர்களுக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்படு கிறது. கடல் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பை சரி செய்ய பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டு கிறது. கோவிலில் இருந்து சுமார் 100 மீ நீளத்திற்கு 6 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் பக்தர்கள் மண் சரிவில் சிக்கி கீழே விழும் நிலை இருந்து வருகிறது. பக்தர்கள் கடலில் புனித நீராடும்போது கவனமாக இருக்கும்படி போலீசாரும், கடற்கரை கோவல் பாதுகாப்பு பணியாளர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை உச்சியிலிருந்து, மஹா தீப கொப்பரை இறக்கப்பட்டு, ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் யோக நரசிம்மர் கண் விழிக்கும் திருநாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில், நேற்று கடை ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.மயிலாடுதுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar