Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அறநிலையத்துறை அதிகாரிகளை உள்ளே விட ... அனுமன் ஜெயந்தி; கோவை கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.. பக்தர்கள் குவிந்தனர் அனுமன் ஜெயந்தி; கோவை கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி: 100008 வடை மாலை சாற்றி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
அனுமன் ஜெயந்தி: 100008 வடை மாலை சாற்றி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

19 டிச
2025
10:12

நாமக்கல்; ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடைமாலை சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது.


நாமக்கல், கோட்டை பகுதியில் புரான சிறப்பு பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. உள்ளது. இங்கு, ஒரே கல்லில் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில், சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்கழி மூல நட்சத்திரமான நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, இன்று அதிகாலை முதல், 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள், சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, திரை விலக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.


தொடர்ந்து, 11:00 மணிக்கு, வடைமாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்த்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம் போன்ற நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு, தங்க கவசத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உள்ளூர், வெளியூர் பக்தர்கள், அதிகாலை முதலே ஒரு கி.மீ., துாரம் வரை வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, 79, ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நாமக்கல் கோட்டை சாலை, பூங்கா சாலை, எம்.ஜி.ஆர்., நுழைவு வாயிலில் இருந்து, மதுரை வீரன் கோவில் வரை முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar