Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கூடலழகிய பெருமாள் கோயிலில் அனுமன் ... ஊட்டியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: கோவில்களில் சிறப்பு வழிபாடு ஊட்டியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பே உயிர் தியாகம்; அன்று குட்டி; இன்று பூர்ணசந்திரன்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பே உயிர் தியாகம்; அன்று குட்டி; இன்று பூர்ணசந்திரன்

பதிவு செய்த நாள்

20 டிச
2025
08:12

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையில் நேற்றுமுன்தினம் பூர்ணசந்திரன் 40, தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார். இவருக்கு முன்னோடியாக திருப்பரங்குன்றம் கோயிலை ஐரோப்பியர்களின் படையெடுப்பில் இருந்து காக்க, கோபுரத்தின் உச்சியில் இருந்து குட்டி என்பவர் குதித்து உயிர் தியாகம் செய்தது ப.சிவனடி என்பவர் எழுதிய இந்திய சரித்திரக் களஞ்சியம் (1791- 1800) நுாலில் பக்கம் எண் 94ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:


தொன்மையும் பல சமயத் தொடர்பும் உடைய திருப்பரங்குன்றத்தில் 1792 ல் நடந்த ஒரு நிகழ்ச்சி நெஞ்சத்தை உருக்குவதாய் உள்ளது. மதுரையில் 1792 ல் தங்கியிருந்த ஐரோப்பிய படையினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கும் சேதங்களை உண்டாக்கினர். ஐரோப்பிய படை திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் புக முயன்றது. இங்கு மலையை குடைந்தெடுத்த பெரிய குடவரை கோயில் இருப்பதாலும் மாமண்டபங்களையன்றி, மாமதில் சூழ்ந்த திருச்சுற்றுகள் இல்லாததாலும் புறச்சமயத்தவர் (ஐரோப்பியர்) இதனுள்ளே நுழைவது கோயிலை தீட்டுப்படுவதற்கு ஒப்பாகும். ஐரோப்பியர் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நுழைவதை பொறுக்க முடியாத, கோயில் சேவகர் முத்துக்கருப்பன் மகனான குட்டி என்பவர், அப்படையினர் நுழைவதை தடுக்க கோபுரத்தில் ஏறி அங்கிருந்து கீழே விழுந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். வெட்டுவான் என்போர் கோயிலுக்காக தம் கழுத்தை தாமே அறுத்து உயிர்ப்பலி தரும் வழக்கம் சில கோயில்களில் இருந்தது. 


ஆனால் கோயிலின் துாய்மையை காக்க ஒருவர் இவ்வாறு கோபுரத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்தது புதிய செய்தி. குட்டியின் எதிர்பாராத இச்செயலைக் கண்ட ஐரோப்பிய படையினர், கோயிலினுள் நுழைவதை கைவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இவ்வாறு கோயிலின் துாய்மை காக்க உயிரிழந்த குட்டியை கோயில் அலுவலர்கள் பாராட்டி அவரது குடும்பத்திற்கு ரத்தக் காணிக்கை என்னும் பெயரில் நிலம் அளித்தனர். இவ்வாறு அந்த நுாலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – நமது சிறப்பு நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar