Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை ஐயப்பன் கோயிலில் மண்டல ... குறிஞ்சிப்பாடியில் கிருபானந்த வாரியார் பிறந்தநாள் குறிஞ்சிப்பாடியில் கிருபானந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா செங்கை மாவட்டத்தில் விமரிசை
எழுத்தின் அளவு:
அனுமன் ஜெயந்தி விழா செங்கை மாவட்டத்தில் விமரிசை

பதிவு செய்த நாள்

20 டிச
2025
09:12

திருப்போரூர்: கேளம்பாக்கம் –- வண்டலுார் சாலையில், பிரசித்தி பெற்ற புதுப்பா க்கம் வீர ஆஞ்சநேயர் மலைக்கோவில் உள்ளது.


இக்கோவிலில் இந்தாண்டு, அனுமன் ஜெயந்தி வைபவம் நேற்று நடைபெற்றது. அதிகாலை படிபூஜையும், காலை 7:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், பால்குட அபிஷேகம் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர். இதே போல், நெல்லிக்குப்பம் அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தன. ஆஞ்சநேயருக்கு, 108 வடை மாலையுடன், சிறப்பு தீபாராதனை நடந்தது. செங்காடு கிராமத்தில், சிறப்புபெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் அன்னதானம், பக்தர்கள் பிரார்த்தனை வடை மாலை சார்த்தல், ஆஞ்ச நேயர் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தல் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. மைலை கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தன. ஆஞ்சநே யருக்கு 108 வடை மாலையுடன், சிறப்பு தீபாராதனை நடந்தது. 


வெண்பேடு கிராமத்தில் உள்ள 32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் ஜெய் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறுதாவூர் உ ள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும், அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.


அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் பகுதியில், சென்னை -– திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடமலைப்புத்துாரில் உள்ள ஜெய ஆஞ்சநேயருக்கு, நேற்று காலை 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வடை மாலை, வெற்றிலை மாலை மற்றும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, ஜெய ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். படாளம் அருகே உள்ள திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் எதிரே உள்ள வீர அஞ்சநேயர் கோ விலில், நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், உள் பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே நின்ற கோலத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு அதிகாலையில், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது . ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar