Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் கோவில் மகர விளக்கு திருவிழா: ... பெருமாள் கோயில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை பெருமாள் கோயில்களில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி, ரெகுநாதபுரத்தில் மகர சங்கராந்தி விழாவில் ஜோதி தரிசனம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி, ரெகுநாதபுரத்தில் மகர சங்கராந்தி விழாவில் ஜோதி தரிசனம்

பதிவு செய்த நாள்

15 ஜன
2026
12:01

பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி விழாவையொட்டி சரண கோஷம் முழங்க மகரஜோதி தரிசனம் நடந்தது. கோயிலில் தினமும் அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு வருகிறது. இங்கு ஆரியங்காவு கோயில் போன்று புஷ்கலா தேவி, தர்மசாஸ்தா திருக்கல்யாணம் ஆண்டு தோறும் நடக்கிறது.


இந்நிலையில் நேற்று மகர சங்கராந்தி விழாவையொட்டி அனைத்து வகையான அபிஷேகங்களும் நடந்தன. பின்னர் யோக நிலையில் இருக்கும் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு துாப தீப ஆராதனைகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மகர ஜோதி தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சரண கோஷம் முழங்க வழிபாடு செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கு அனைத்து விதமான பூஜைகளும் விழாக்களும் நடந்து வருகிறது. நேற்று மகர ஜோதியை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு அஷ்டாபி ஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வல்லபை ஐயப்பன் சன்னிதானம் முன்புறம் நேற்று மாலை 6:00 முதல் 6:40 மணிக்குள் சிறப்பு பூஜை மற்றும் பக்தர்கள் அனைவரும் கண்டு தரிசித்து செல்லும் வகையில் மகரஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.


பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய் திருந்தார். ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar