பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளா: முத்தன் மற்றும் முத்திக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2026 11:01
பாலக்காடு:திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், நேற்று முத்தன் மற்றும் முத்திக்கு பூஜை நடக்கிறது.
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே திருநாவாயா நாவா முகுந்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் "மாமாங்க திருவிழா எனும் மஹாமக கும்பமேளா, தற்போது வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.270 ஆண்டுகளுக்குப் பின் தற்போது விழா நடப்பதால், பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். பாரதப்புழா நதியில் பிப்., 3 வரை கலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் புனித நீராடலாம். மாலையில் நிளா ஆரத்தி நடக்கிறது.நேற்று விவசாய செழிப்பு மற்றும் நன்மக்கட் பேறு வேண்டி, கேரளாவின் தனித்துவமான திராவிட முறைப்படி உள்ள முத்தன் மற்றும் முத்திக்கு (முன்னோர்களுக்கு) சிறப்பு பூஜைகள் ஆச்சார்யார் பறைக்கல் பிரதீப் பணிக்கர் தலைமையில் நடந்த்து.