சென்னை பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோத்சவம்; குங்கும அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2026 05:02
சென்னை: தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், பிரம்மோத்சவ விழா நாளை துவங்குகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒன்பது நாள் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்கிறது. இதை முன்னிட்டு, இன்று குங்கும அர்ச்சனையும், அங்குரார்ப்பணமும் நடந்தது. மாலை விஷ்வக்சேன ஆராதனை, ரக்ஷாபந்தனம் நடந்தது. அதைத்தொடர்ந்து, அங்குரார்ப்பணம் எனும் முளைப்பாரியிடுதல் நிகழ்வு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரம்மோத்சவ துவக்க விழாவான, நாளை காலை துவஜாரோகணம் எனும் கொடியேற்ற வைபவம் காலை 7:30 முதல் 10:30 மணிவரை நடக்கிறது. வரும், 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு கருட வாகன புறப்பாடு நடக்கிறது. 15ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.