உடுமலை ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவிலில் பாலாலய விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2026 11:02
உடுமலை: உடுமலை ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவிலில் பாலாலய விழா நடந்தது.
உடுமலை சிவலிங்கம் பிள்ளை லே–அவுட்டில் ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாலாலய விழா நேற்று நடந்தது. இக்கோவில், கும்பாபிேஷகம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கான பாலாலய விழா நேற்று நடந்தது. முகூர்த்தகால் நடப்பட்டு, பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாகுழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.