சதுரகிரியில் சிவராத்திரி வழிபாடு; பக்தர்களை கூடுதல் நேரம் அனுமதிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2026 04:02
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். சட்டசபை தொகுதி தலைவர் மனோஜ் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சென்னையில் நடக்கும் மாநில மாநாட்டிற்கு அதிகளவில் தொண்டர்கள் செல்வது, ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்டை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, மகா சிவராத்திரி அன்று அரசு விடுமுறை அளிப்பது, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சிவராத்திரி வழிபாட்டிற்கு பக்தர்களை கூடுதல் நேரம் அனுமதிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகரத் தலைவர் மனோஜ் குமார், நகர செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர் தங்கம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.