இதை முன்னிட்டு, நேற்று காலை குங்கும அர்ச்சனையும், மாலை முளைப்பாரி எடுத்தலும் நடந்தது. பிரம்மோத்சவ துவக்க நாளான இன்று காலை துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடந்தது. மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மாலை உஞ்சல் சேவை நடந்தது. இரவு சின்ன சேஷ வாகனத்தில், தாயார் பிரஹாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். வரும், 16ம் தேதி வரை நடக்கும் இந்த உத்சவத்தில், நாளை பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகன புறப்பாடு நடக்கிறது. நாளை மறுநாள் முத்துப்பந்தலும், இரவு சிம்ம வாகன புறப்பாடும் நடக்கிறது. கல்ப விருக்ஷ, ஹனுமந்த வாகன புறப்பாடு வரும், 10ம் தேதி நடக்கிறது. 11ம் தேதி பல்லக்கு உற்சவமும், கஜ வாகன புறப்பாடும் நடக்கிறது. 12ம் தேதி சர்வபூபால வாகன புறப்பாடும், அன்று இரவு 7:00 மணிக்கு கருட வாகன புறப்பாடு நடக்கிறது. சூரிய, சந்திர பிரபை வாகன புறப்பாடு, பிப்., 13ம் தேதி நடக்கிறது. அடுத்த நாள் காலை ரத உற்சவமும், அன்று இரவு அஸ்வ வாகன புறப்பாடும் நடக்கிறது. வரும், 15ம் தேதி சக்ர ஸ்நானம் காலை நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவம் பூர்த்தியடைகிறது.