ஈஷா யோக மைய ரதம் 500 கிராமங்கள் வழியாக 700 கி.மீ., பயணித்து கோவை வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 05:02
அன்னூர்; சென்னையில் துவங்கிய ஈஷா யோக மைய ரதம் 700 கி.மீ., தூரம் பயணித்து 500 கிராமங்கள் வழியாக இன்று கோவை மாவட்ட எல்லைக்கு வந்தது.
கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் வருகிற 15ம் தேதி மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பல நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தர உள்ளனர். மகா சிவராத்திரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 13வது ஆண்டாக சென்னையிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு ரதம் கடந்த ஜன. 15ம் தேதி புறப்பட்டது. ஒன்பது மாவட்டங்களில், 500 கிராமங்கள் வழியாக, 700 கி.மீ., தூரம் பயணித்து, இன்று மாலை கோவை மாவட்டம் வந்தது. பசூரில் தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ரதத்துடன் 63 நாயன்மார்கள் சிலைகள் தாங்கிய வாகனமும் யாத்திரையில் வந்தது. தன்னார்வலர்கள் கூறுகையில், தென் கைலாய பக்தி பேரவை சார்பில், சிவாங்க பாதயாத்திரை உடன் இந்த ரதத்தை கிராமங்கள் தோறும் கொண்டு செல்கிறோம். 40 பேர் சென்னையில் இருந்து வெள்ளிங்கிரி மலை வரை பாதயாத்திரையாக செல்கிறோம். பல கிராமங்களிலும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிவராத்திரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம், என்றனர். ரதம் நாளை காலை சென்னப்ப செட்டி புதூர், கோவில்பாளையம் வழியாக சரவணம்பட்டி செல்கிறது.