மாசி சிவராத்திரி விழா; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2026 10:02
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால், கோயில் நடை சாத்தப்படும். மாசி மகா சிவராத்திரி விழாவுக்கு நேற்று முன்தினம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. 3ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்மன் கேடயத்தில் வீதி உலா செல்வார்கள். பின் காலை 7 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் புறப்பாடாகி வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள்வார்கள். மாலை 6 மணிக்கு மண்டகபடியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி இரவு 8 மணிக்கு மேல் கோயிலுக்கு வருவார்கள்.
நடை சாத்தல் : இதனால் கோயிலில் இன்று அதிகாலை 2:30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால, சாயரட்ச பூஜை நடக்கும். பின் சுவாமி, அம்மன் புறப்பாடானதும் காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இதனால் இன்று முழுவதும் பக்தர்கள் புனித நீராட, தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.