திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2026 05:02
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தியான நிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று காலை 11:00 மணிக்கு யோகபைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் துவங்கின. ரமேஷ் குருக்கள், பிரதோஷ குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள் பூஜைகளை நடத்தினர். பின்னர் மூலவருக்கு அபிேஷகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமிக்கு நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர்.