அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் வரும் 15ம் தேதி மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2026 11:02
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் வரும் 15ம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் வருகிற 15ம் தேதி, 50 வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. மாலை 4:30 மணிக்கு சிறப்பு வழிபாடு துவங்குகிறது. 15ஆம் தேதி மாலை துவங்கி 16ம் தேதி காலை 4:30 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வரும் 15 ம் தேதி மாலையில் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெறுகிறது. இதை எடுத்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8:00 மணிக்கு அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை மற்றும் பக்தி நடனம் நடைபெறுகிறது. மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.