திருத்தணி கோவிலில் பழமையான காளி கோபுரம் இடித்து அகற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2026 04:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், தேர் வீதி விரிவாக்க பணி நடைபெறும் நிலையில், 100 ஆண்டுகள் பழமையான காளி கோபுரம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில், 2009ம் ஆண்டு ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால், ராஜகோபுரம் பணி முழுமை அடைவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு ராஜகோபுர பணிகள் முழுமையாக முடிந்தது. கடந்தாண்டு ராஜகோபுரத்திற்கு நவீன கற்களால் வாசற்படி அமைக்கப்பட்டது. இதையடுத்து, ராஜகோபுரத்துக்கும், தேர் வீதிக்கும் இணைப்பு படிகள் அமைக்கும் பணி கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. தற்போது, ராஜகோபுரத்தையும், தேர்வு வீதியையும் இணைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த காளி கோபுரம் இடித்து அகற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று அதிகாலை கோவில் அதிகாரிகள் முன்னிலையில், காளி கோபுரம் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.