சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகள் நிறைவுற்று, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 11:00 மணிக்கு, மங்கள இசையுடன் வேத மந்திரங்கள் முழங்க, காமாட்சி அம்மாள், வரமுக்தீஸ்வரர் சன்னிதி கோபுர கலசங்கள், ராஜகோபுரம் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, பக்தர்கள் பெருமானை நெஞ்சுருக வணங்கினர். அதை தொடர்ந்து, சிறப்பு தீபாரதனை நடந்தது. மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி, தேவசேனா, சிவசுப்ரமணியரும், ரிஷப வாகனத்தில் காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரரும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.