வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான சபையில் மாசி மாத பூச தினமான நேற்று, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இரவு, 7:45 மணிக்கு, 6 திரைகள் விலக்கப்பட்டு நடந்த ஜோதி தரிசனத்தில், ஏராளமான சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் கண்டனர். சன்மார்க்க பின்பற்றாளர்கள் சார்பில் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:45 மணி வரை நடந்த ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்