நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு எண்ணைய், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பால், தயிர் மற்றும் சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் அதிகாலை காவிபட்டு உடுத்தி ராஜ அலங்காரத்திலும், வட மாலையிலும், மதியம் வெற்றிலை மற்றும் மலர் மாலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பத்தாயிரம் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.