சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2026 11:03
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.
விழா கடந்த 13 ம் தேதி காலை 9.00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகியது. 17 ம் தேதி மதியம் 1.00 மணிக்கு பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7.00 மணிக்கு தாய் வீட்டு சீர் எடுத்து வருதல், இரவு 10.00 மணிக்கு இருளமுகம், உச்சிக்கொப்பறை, காட்டேரி உடன் மயானம் செல்லுதல் நடந்தது. சிறப்பு விழாவான மயானக்கொள்ளை உற்சவம் 18 ம் தேதி (நேற்று) நடந்தது. அதையொட்டி காலை 9.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 2.00 மணிக்கு கரகம், உச்சிக் கொப்பரையுடன் மயானம் சென்று, மாலை 5.00 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. 20 ம் தேதி காலை 10.00 மணிக்கு மஞ்சள் விளையாட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.