Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நவமி: அயோத்தி ராமர் கோவிலில் ... ராம நவமி; கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம் ராம நவமி; கும்பகோணம் ராமசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் உறுதித் தன்மை கண்டறிய சோதனை ஓட்டம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் உறுதித் தன்மை கண்டறிய சோதனை ஓட்டம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
10:03

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேரின் உறுதித்தன்மை விவகாரத்தில், இன்று தேர் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த, 23ம் தேதி, துவங்கியது. வரும், 29ம் தேதி, தேரோட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், தேரை ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர் தேரின் உறுதித்தன்மையில் சந்தேகம் இருப்பதாக, நிலைத்தன்மை சான்றளிக்கவில்லை. இதனால், சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நடத்த அறநிலையத்துறையினர் திட்டமிட்டனர். இதற்கு, ஹிந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்றுமுன்தினம் பொதுப்பணித்துறையினர் மீண்டும் ஆய்வு செய்தனர். தேரில் உள்ள குறைகளை கூறி, அதை நிவர்த்தி செய்யுங்கள் அதன்பின், மீண்டும் ஆய்வு செய்து முடிவு தெரிவிப்பதாக கூறினர். இதனையடுத்து, பொதுப்பணித்துறையினர் கூறிய குறைகளை நிவர்த்தி செய்யும் பணி நடந்தது. நேற்று இரவு, பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மீண்டும், நாளை (இன்று) காலை ஆய்வு செய்து இறுதி முடிவு தெரிவிப்பதாக கூறினர். அப்போது, அங்கிருந்த ஹிந்து அமைப்பினர், பொதுப்பணித்துறை அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு, தேரோட்டம் நிச்சயம் நடக்க வேண்டும். தேரின் உறுதி தன்மையறிய, நாளை (இன்று) சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். அதில், தேர் உறுதியாக உள்ளதா என்பது தெரியும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நாளை (இன்று) பகல், 12:00 மணிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar