ராம நவமி: அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள்.. ராம கோஷத்துடன் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2026 10:03
உத்தர பிரதேசம்: இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராம ஜென்மபூமியில் அதிகாலை முதல் பிரபு ஸ்ரீராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அயோத்தி ராம ஜென்மபூமியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு ராம நவமி பண்டிகை பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக சைத்ர நவராத்திரியின் அஷ்டமி நாளான நேற்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி ஆலய வளாகத்திற்குள் அமைந்துள்ள கோவிலில், அனைத்து வேத சடங்குகளையும் பின்பற்றித் துவஜாரோஹணம் (கொடியேற்றம்) நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ராம நவமி தினமான இன்று காலை முதல் ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ராம்லல்லாவின் தரிசனம் காண குவிந்து வருகின்றனர்.
ஸ்ரீ ராம நவமி எனும் இப்புனித நன்னாளில், இன்று இறைவனுக்குப் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும்; அதனைத் தொடர்ந்து ஜன்ம ஆரத்தி மற்றும் சூரிய திலகம் சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி நடைபெறும்.