Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ... மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா விமரிசை மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா

பதிவு செய்த நாள்

28 மார்
2026
07:03

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு, உற்சவருடன் 63 நாயன்மார்கள் திருவீதிஉலா நேற்று நடந்தது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, கடந்த 22ம் தேதி காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையிலும், இரவும், உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில், வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன்படி, ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு கைலாசபீட ராவண வாகனத்தில் ஏகாம்பரநாதர் உலா வந்தார். இதில், ஆறாம் நாள் உத்சவமான நேற்று காலை, 63 நாயன்மார்கள் உத்சவம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் துளுவ வேளாள மரபினர்கள் சங்கம் சார்பில் நடந்த உத்சவத்தில், அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர், சண்டிகேஸ்வரர் என 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது காஞ்சி புரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை சார்பில், தேவார திருவீதியுலா வாகனத்தில், ஓதுவார்கள் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏழாம் நாள், பிரபல உத்சவமான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. இதில், 10ம் நாள் உத்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாணம் வரும் 31ம் தேதி இரவு நடக்கிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar