ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக 10ம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2026 08:03
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிேஷக 10ம் ஆண்டு விழாவையொட்டி, ேஹாமங்களுடன் சிறப்பு கலசாபிஷேகம் நடந்தது.
கும்பாபிேஷக ஆண்டு விழாவையொட்டி, காலை, 8:00 முதல், 8:30 மணி வரை, மங்கள இசை; காலை, 8:30 மணிக்கு கலசபூஜை, ேஹாமபூஜை, மதியம் 12:15 மணிக்கு திரவிய அபிஷேகம் மற்றும் கலசாபிேஷகம், தீபாராதனை நடந்தது. திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் தலைமையில், சிவாச்சாரியார்கள், கலசங்களில் புனித தீர்த்தம் வைத்து, ேஹாம பூஜைகளை நடத்தினர். ஓதுவார்களும், சிவனடியார்களும், திருமுறையை பாராயணம் செய்தனர். யாகவேள்வி நிறைவை தொடர்ந்து, மங்களஇசை, சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழுங்க, ஊர்வலமாக புறப்பட்டன. தொடர்ந்து, மூலாலய மூர்த்திகளுக்கு கலசாபி ேஷகம் மற்றும் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் பேசுகையில்,‘‘திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக 10வது ஆண்டு விழா நடக்கிறது. தற்போதுதான், கும்பாபிஷேக விழா நடந்தது போல் இருக்கிறது. கோவில் சிறப்பாக பராமரிக்கப்படுவதால், பொலிவு குறையாமல் இறைசக்தி நிரம்பியிருக்கிறது. பக்தர்களும், நிர்வாகிகளும் உள்ளன்புடன் கோவில் திருப்பணிகளை செய்தால், இறைவனின் ஆசீர்வாதம் தடையின்றி கிடைக்கும்,’’ என்றார். விழாவில், மாவட்ட அறங்காவலர் குழுவினர், கோவில் அறங்காவலர்கள், ஆதீஸ்வர் டிரஸ்ட் நிர்வாகிகள், சிவனடியார்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.