Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவ விஷ்ணு கோவிலில் திருக்கல்யாணம் ...  மயிலம் அக்னி குளத்தில் முருகனுக்கு தீர்த்தவாரி  மயிலம் அக்னி குளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் கோலாகலம்: காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் கோலாகலம்: காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2026
06:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, இன்று அதிகாலை 3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு, நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை டிரஸ்ட் சார்பில், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயில்காவடிகளும், 260 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். பின், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் 260 பால்குட அபிஷேகம் நடந்தது. நண்பகல் 12:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் தங்க தேரில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும், 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.


திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். அதேபோல், திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில், உற்சவர் சிவகாமி சுந்தேரஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை பூண்டி ஒன்றியம் தேவந்தவாக்கம் கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தேவநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். அதேபோல், தொம்பரம்பேடு கால பைரவர் கோவில், ஊத்துக்கோட்டை அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில், செட்டித்தெருவில் உள்ள விக்னேஷ்வர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar