பதிவு செய்த நாள்
18
ஜன
2013
01:01
ஆண்டாள் தன்னை கண்ணனின் காதலி நப்பின்னையாகவும், தோழிகளைக் கோபியராகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகவும் கருதிப் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்பாவை.மார்கழியில் திருப்பாவை பாடினால் பணம் கொட்டுமா? கார் வாங்க முடியுமா? இப்போதிருக்கும் அபார்ட்மென்டை மாற்றிவிட்டு தனியாக பங்களா வாங்கலாமா? என்றெல்லாம் கணக்குப் போட்டால், அது எதுவுமே நடக்காது. அப்படி எதுவுமே தராதென்றால், நான் ஏன் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பாவையைப் பாட வேண்டும் என்று கேட்டால், அது எல்லாமே தரும் என்பது தான் பதில். குழப்பமாக இருக்கிறதல்லவா? ஆம்...திருப்பாவை சரீர சுகம் தருவதற்கானது அல்ல. அதாவது, இந்த உடலுக்கு சுகம் தரும் எந்த விஷயத்தையும் இது தராது. ஆனால், ஆத்மபலனை இது தரும். எவ்வளவு சுகத்தை இந்த பூமியில் அனுபவித்தாலும், ஒருநாள் அந்த பூமிக்கு போன பிறகு, தேவையான வசதி கிடைக்க வேண்டுமே! அந்த ஆத்மபலனை திருப்பாவை தரும். ஆத்மபலன் கிடைத்து விட்டால் எல்லாமே கிடைத்த மாதிரி தான். பசி, தூக்கம், துக்கம், தாகம் எதுவுமே அந்த உலகில் இருக்காது.