Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் பத்மாவதி சீனிவாச ... குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா 50வது ஆண்டு உற்சவம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் விழா: பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சி
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் விழா: பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சி

பதிவு செய்த நாள்

26 ஏப்
2026
11:04

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் கோலாகலமாக நடந்தது.

கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று 5ம் நாள் திருவிழாவாக பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. நேற்று காலை கோவில் உள்ள திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து விநாயக பெருமான், சோமாஸ்கந்தர்,ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்பிரமணியர்,ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி களுக்கு மகாபிஷேகம் நடைபெற்ற சிறப்பு அலங்காரம் நடந்தது. இரவு 7.45 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்ரமணியர் மற்றும் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வெளிப்புற வளாகத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் நான்கு வேதங்களையும் ஓதுவாமூர்த்திகள் அவிநாசி தேவாரத்தையும் பாராயணம் செய்ய 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம் கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு "அவிநாசியப்பருக்கு அரோகரா "ஓம் நமச்சிவாய என கோஷமிட்டு மனமுருகி வேண்டி நின்றனர். தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக கண்கவரும் வானவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா காட்சி நடைபெற்றது. திருவீதி உலாவின் போது கரூர், திருப்பூர்,கோவை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்திருந்த சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியம் இசைத்தனர். முன்னதாக பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பில், பாதிரி மரத்து அம்மன் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அன்னதானத்தை கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் துவக்கி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar