Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகபூண்டி நகேஸ்வரர் கோவிலில் தேர் ... வாசவி அம்மன் ஜெயந்தி விழா சங்காபிஷேகத்துடன் துவக்கம் வாசவி அம்மன் ஜெயந்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை கோவில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
வால்பாறை கோவில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
04:04

வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில், சித்திரை மாத திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.


வால்பாறை அடுத்துள்ளது ரொட்டிக்கடை முனீஸ்வரன், நாகாத்தாள், மாரியம்மன், கருப்பண்ணசுவாமி கோவிலின், 47ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் வரும், 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு விநாயர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். இரவு, 8:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்தல் நடக்கிறது.


வரும் மே 1ம் தேதி காலை, 7:00 மணிக்கு சக்தி விநாயர் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகுபூட்டி, முளைப்பாரி, பூவோடு எடுத்தும், அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதுரைவீரன் கோவில் வால்பாறை நகர் கக்கன்காலனி மதுரைவீரன், தொட்டிமுனி திருக்கோவிலின், 76ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை மாலை, 4:00 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது. இரவு 8:30 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். 29ம் தேதி காலை, 9:30 மணிக்கு மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.


பிடாரியம்மன் கோவில் நடுமலை பிடாரியம்மன் கோவிலின், மூன்றாம் ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேறறத்துடன் துவங்கியது. வரும், 30ம் தேதி  காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு பிடாரியம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடக்கிறது. வரும்  மே 1ம் தேதி காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar