Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழாவில் விடிய ...  இறைவழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்; போர்ச்சுக்கல் பக்தர்கள் நெகிழ்ச்சி  இறைவழிபாடு செய்தால் கைமேல் பலன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சித்திரை திருவிழாவில் கள்ளழகர் தசாவதார காட்சி அளித்தார்
எழுத்தின் அளவு:
பரமக்குடி சித்திரை திருவிழாவில் கள்ளழகர் தசாவதார காட்சி அளித்தார்

பதிவு செய்த நாள்

03 மே
2026
08:05

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார்.

பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. மே 1 அதிகாலை 3:00 மணிக்கு கள்ளழகர் வெண்பட்டு உடுத்தி பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார். நேற்று தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். இரவு 1:00 மணிக்கு வண்டியூர் பெருமாள் கோயிலை அடைந்தார். அங்கு சந்தன காப்பு முதலான சைத்யோபசாரம் நடந்தது. முன்னதாக ஆற்றுப்பாலம் பகுதியில் ஆயிரம் பொன் சப்பரத்தில் குதிரை வாகனத்தில் அழகர் அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் மின்விளக்குகளால் ஜோடிக்கப்பட்ட ஆயிரம் பொன் சப்பரத்தை 3 கி.மீ., தூரம் வைகை ஆற்றில் வண்டியூர் பெருமாள் கோயில் வரை இழுத்துச் சென்றனர். இன்று மாலை 5:00 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். மகாதீப ஆராதனைக்கு பின் வண்டியூரில் இருந்து புறப்பாடாகினார். இரவு 8:00 மணிக்கு வைகை ஆற்றில் மட்டா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு அழகர் சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து வாணியர் மண்டகப்படியில் இரவு 11:00 மணிக்கு சேர்க்கையாகி, விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார். திருவிழாவை ஒட்டி வைகை ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar