தலைகீழாக நின்றபடி சிவதாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்து 8 வயது மாணவன் சாதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2026 04:05
கர்நாடகாவைச் சேர்ந்த ஓம் என்ற 8 வயது மாணவன் தலைகீழாக நின்றபடி சிவதாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீ சிவ தாண்டவ ஸ்தோத்திரம் புகழ்பெற்ற துதி ஆகும். இது சிவபெருமானின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் சங்கத மொழிப்பாடலாக விளங்குகின்றது. எதுகை மோனையும் இப்பாடலின் சிறப்பம்சம். இதில் மயங்கி ஈசனே நடனமாடுவார் என்ற என்பதால் இது சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இநத சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை, வெறும் 8 வயதிலேயே, ஓம் என் என்ற மாணவன் சுவரில் சாய்ந்து, கைகளைப் பயன்படுத்தாமல் சிரசாசனம் செய்துகொண்டே, அவர் முழு சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தையும் வெறும் 3 நிமிடங்கள் 47 வினாடிகளில் பாராயணம் செய்து, ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இது சாதனை மட்டுமல்ல நினைவாற்றல், அசாதாரணமான சமநிலை, சுவாசக் கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.