கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2026 05:05
கோவை; சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது.
சதுர்த்தி விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலத்தில் வரும் ஒன்றாகும் இந்த காலத்தில் விநாயகரை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவதற்கு சிறந்த வழிபாடாக கருதப் படுகிறது . வைகாசி மாத பிறப்பு மற்றும் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் மூலவர் விநாயகர் பெருமான் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் வெள்ளி காப்பு கவசத்தில் கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.