சுந்தரகாண்டத்தை மந்திர ரத்தினம் என்பர். சீதையின் துன்பத்தைப் போக்கும் விதத்தில் கணையாழியை (மோதிரம்) கொடுத்து ராமனின் வருகையை சீதையிடம்தெரிவித்தவர் அனுமன். இந்த நிகழ்ச்சி சுந்தரகாண்டத்தில் இடம் பெறுகிறது. கண்டேன் சீதையை என்று சுபசெய்தியை ராமனுக்கு தெரிவித்ததும் இதில் தான். துன்பத்தில் வாடுபவர்கள் இதைப் படித்தால் விரைவில் துன்பம் தீரும் என்பது அனுபவசாலிகள் கண்ட உண்மை.