Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தி: நீர் ... மார்கழி ஏகாதசி: கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மார்கழி ஏகாதசி: கரி வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவில் தரைதளத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் செங்கல் பதிக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோவில் தரைதளத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் செங்கல் பதிக்கும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

14 ஜன
2026
10:01

தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில், தரைதளம் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும், கோவில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியை பயன்படுத்தி, பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர்.


உலக புகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலின் உள்பிரகாரத்தில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், பதிக்கப்பட்ட தட்டையான செங்கற்கள் தேய்ந்து, மேடு பள்ளமாக இருப்பதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி, பாசி படர்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, இந்திய தொல்லியல் துறையினர், கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் ஒவ்வொரு கட்டமாக செங்கல் கற்களை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மீண்டும் தட்டையான செங்கல் கற்களை பதித்து, கட்டமைப்பை ஏற்படுத்தி வருகி்ன்றனர். அதன்படி கடந்த 2023 – 2024ம் ஆண்டில் முதற்கட்டமாக, கோவிலின் தென்புற பகுதியில், பழைய செங்கல் கற்கள் அகற்றப்பட்டு, புதிய கற்கள் பதிக்கப்பட்டன. 


தற்போது, கோவிலின் பின்புறம், கருவூர் சன்னதிக்கும், விநாயகர் சன்னதிக்கும் இடையே சுமார் 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்ள பழைய கற்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. இந்த பழைய கற்கள் அகற்றப்பட்டவுடன், புதிய தட்டையான செங்கல் கற்கள் அமைக்கப்படவுள்ளது.  இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது: பெரியகோவிலில், மழை நீர் தேங்கும் தரைதளத்தை சீரமைக்க, 75 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிக்காக பிரத்யோகமான தட்டையான செங்கல் கற்கள், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கோவிலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், அதிர்வு ஏற்படாத வகையிலும், இயந்திரங்கள் இல்லாமல், உளி, சுத்தியை கொண்டு தொழிலாளர்கள், பழைய கற்களை பெயர்க்கும், பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும், நான்கு மாதங்களில், இப்பணிகள் நிறைவடையும். பிறகு, நந்தி மண்டபம் பகுதியில் உள்ள தரைதளம் சீரமைப்பு பணிகள் துவங்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar