பதிவு செய்த நாள்
03
ஜூன்
2026
08:06
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த மே, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்து வருகிறது. கடந்த மே, 26ம் தேதி அதிகார நந்தி கோபுர தரிசனம், தெருவடைச்சான் உற்சவம், 30ம் தேதி தேர்த் திருவிழா நடந்தது. தொடர்ந்து, 31ம் தேதி நடராஜர் தரிசனம், வீதியுலா, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடந்தது. நேற்று முன்தினம் உற்சவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பாடலீ்ஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, முருகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி தெப்பல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.