பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் திருஊடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2026 08:06
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திரு ஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் வைகாசி விசாக விழா நிறைவு அடைந்தது.
பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா மே 24ல் துவங்கியது. விழா நாட்களில் தங்கமயில், காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி யானை, வெள்ளி மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. மே 29 இரவு வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம், மே 30ல் தோளுக்கினியான் வாகனத்தில் தேரேற்றம் நடந்தது. வைகாசி விசாக தேரோட்டம் ரத வீதிகளில் நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் நடையை அடைத்தனர். ஓதுவார் சிவநாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தினார். பின் நடை திறந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவு அடைந்தது.
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிவன், பார்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததும் தம்பதி சமேதராக ரிஷப வாகனத்தில் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். உற்சவ மூர்த்தி திருஞானசம்பந்தருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததும் சிவன், பார்வதி ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.