Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரை; ... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம் விமரிசை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருவின் குருபூஜை விழா; வெள்ளி பல்லக்கில் ஆதீனம்
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருவின் குருபூஜை விழா; வெள்ளி பல்லக்கில் ஆதீனம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2026
10:06

மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருவின் குருபூஜை விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனகர்த்தரை வெள்ளி நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் தூக்கி செல்ல முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தின் பட்டிணப்பிரவேச விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. 


மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் நாள் விழாவான இன்று ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஞானபுரீஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,  வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்ல, மூன்று யானைகள், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.  தொடர்ந்து வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக இதில் ஆதின கட்டளை தம்பிரான்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11ஆம் நாளான நாளை தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டிணப்பிரவேசம் நிகழ்வு  இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞானகொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூா்; வைகாசி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் இருந்து 27 ... மேலும்
 
temple news
ஒடிசா: பூரி, ஸ்ரீ ஜெகன்னாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரைக்கான மூன்று தேர்களின் கட்டுமானப் பணிகள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று, ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு தங்கமலை முருகன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது. முருகன் சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar