பூஞ்சோலை சென்ற முத்தாலம்மன்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2026 07:06
நத்தம்: நத்தம் அருகே அய்யாபட்டி ,கோட்டையூர் கிராமங்களில் முத்தாலம்மன் கோயில் திருவிழாக்கள் நடந்தது. கிராமங்களில் முதல்நாள் இரவு வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக மந்தைக்கு வந்த அம்மன்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜை , அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம், ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அய்யாபட்டி, கோட்டையூர் கிராமங்களில் தீவட்டி பரிவாரங்களுடன் முத்தாலம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.