வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2026 11:06
சென்னை; வியாசர்பாடி இரவீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவ ஆண்டு பெருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அம்சமாக இன்று காலை திருத்தேர் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. காலை எட்டு மணி அளவில் திருத்தேர் பெருவிழா கோவிலில் இருந்து தொடங்கி பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தேரை வடம்பிடித்து இழுத்து தேர்த்திருவிழாவை தொடங்கி வைத்தார். தவெக பெரம்பூர் மாவட்ட செயலாளர் சிவா. இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் முல்லை. உள்ளிட்ட ஏராளமானோர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வியாசர்பாடி மூர்த்திங்கர் தெரு. எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை. முத்து முதலி தெரு.திருகோவில் சாலை வீதிகளில் தேர் வலம் வந்து கோவிலை அடைந்தது. அதனைத் தொடர்ந்து வருகின்ற புதன்கிழமை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த பிரம்மோற்சவ ஆண்டு பெருவிழா மற்றும் திருத்தேர் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.