மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் பழைய பாதையில் படிக்கட்டுகளின் உயரம் வேறுபட்டு இருந்தது. இதனால், படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். தற்போது, பழைய படிக்கட்டுகளை அகற்றி, ஒரே உயரமுள்ள படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. கோயில் துணை கமிஷனர் விமலா கூறுகையில்,‘‘மாஸ்டர் பிளானில் ரூ.50 கோடி மதிப்பில், பழைய பாதை படிக்கட்டுகளை சீரமைத்தல், அன்னதானக்கூடம் கட்டுதல், பொருட்கள் பாதுகாப்பு அறை, காலணி பாதுகாப்பு அறை கட்டுதல், உள்ளிட்ட 18 வேலைகள் நடக்கின்றன. 608 படிக்கட்டுகள் கொண்ட பாதையில், 90 படிக்கட்டுகளை அகற்றி, மண்டபம் கட்டி, ஒரே அளவிலான படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளன. படிக்கட்டு சீரமைத்தல், குடியிருப்பு, தங்கும் விடுதி கட்டும் வேலைகள், ஓராண்டுக்குள் நிறைவடையும்’’ என்றார்.