வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி மூன்று கால யாக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2026 03:07
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமி மூன்று கால யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உலக நன்மை வேண்டி நடந்த மூன்று கால யாக பூஜையில் முன்னதாக வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பூஜைகளை வரசித்தி வாராகி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.