மதுரை அழகர் கோயிலை போன்று அனைத்து விழாக்களும் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கிறது. இங்கு மூலவர் பரமசுவாமி அருள் பாலிக்கிறார். இந்த ஆண்டு ஆடி பிரமோற்ஸவம் ஜூலை 20 இரவு காப்பு கட்டுதல், ஜூலை 21 காலை 10:45 மணிக்கு கருட கொடியேற்றப்பட்டு துவங்க உள்ளது. அன்று இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் உலா வருகிறார். தொடர்ந்து காலை, மாலை சிம்ம, சேஷ, கருட, அனுமன், யானை வாகனங்களில் அருள்பாலிக்க உள்ளார். ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் இரவு பூ பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருவீதி உலா நடக்கும். ஜூலை 29 காலை 9:30 மணிக்கு ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்க உள்ளது. இரவு சயன பல்லக்கு, ஜூலை 30 காலை தீர்த்தவாரி நடந்து, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.