கோவை புதூர் வேணுகோபால பெருமாள் கோவிலில் திருத்தேரில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2026 11:07
கோவை; கோவை புதூர் வேணுகோபால பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் இன்று திருத்தேரில் உலா வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை புதூர் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவிலில் 14ம் ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 08ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்வாக புதன்கிழமை கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சூரிய பிரபை சந்திர பிரபை சிம்ம வாகனம் ஆகியவற்றில் திருவீதியுலா வந்தார். இரண்டாம் நாள் வியாழக்கிழமை சேஷ வாகனம் கருட வாகனம் அம்சவாகனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மூன்றாம் நாள் வெள்ளிகிழமை அனுமந்த வாகனம் அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது அடுத்த நிகழ்வாக யானை வாகனம் இரவு கண்ணாடி அறை சேவை ஆகியன நடைபெற்றன. நான்காம் நாள் நிகழ்வாக இன்று திருத்தேரில் உற்சவர் கோவை புதூர் பகுதிகளில் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர் நிகழ்வாக மாலை 4 மணிக்கு தொட்டி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வருவார். நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தவாரி வ நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்ப யாகம் மாலை 6 மணிக்கு புஷ்ப பல்லாக்கில் பெருமாள் எழுந்தருள்வார் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகித்தினர் தெரிவித்தனர். ஐந்து நாட்கள் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.