சூலூர்; பழையூர் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சுல்தான்பேட்டை அடுத்த பழையூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பழமையானது. இங்கு, அமாவாசையை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பால், தயிர், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்களால் மூலவர், உற்சவருக்கு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்குப்பின் வடைமாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். துளசி தீர்த்தம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சுல்தான்பேட்டை, பழையூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வழிபட்டனர். ராம பிரானுக்கு, அனுமன் செய்த சேவைகள் குறித்து பிரசங்கம் நடந்தது.