திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோலாட்டம் ஆடியபடி கிரிவலம் வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2026 04:07
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் நேற்று இரவு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடியபடி கிரிவலம் வந்து வழிபட்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் வந்து வழிபட்டு வருகின்றனர். விழாவில் நேற்று இரவு ராஜகோபுரம் முன் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடியபடி 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்து வழிபட்டனர்.