அழகாபுரி மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2026 05:08
வத்தலக்குண்டு: அழகாபுரி மகாலட்சுமி கோயில் ஆடிப்பெருக்கு திருவிழா கரகம் ஜோடித்து அபிஷேகங்கள் நடந்தது. உறுமி முழங்க கோவிந்தா கோஷத்துடன் மடியில் தேங்காய்களை கட்டிக் கொண்டு வந்த பூசாரி, வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். இதனை தொடர்ந்து மகாலட்சுமி அம்மன் மின் அலங்கார பூ பல்லக்கில் முளைப்பாரி, வானவேடிக்கையுடன் ஊர்வலம் வந்தார்.