ஆடி கிருத்திகை; குமரக்கோட்டம் முருகன் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2026 11:08
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கச்சியப்பர் சிவராச்சாரியார்களால் கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான அருள்மிகு குமரகோட்டம் முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து.வருகின்றனர்.
ஆடி கிருத்திகை ஒட்டி அதிகாலையில் இருந்தே வேலைக்கு செல்லும் பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பல்வேறு மலர்களால் தோரணை கட்டி விசேஷமாக அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தும், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு மலர்களால் அலங்கரித்து ராஜ தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.