செந்துறையில் விவசாயம் செழிக்க மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2026 06:08
செந்துறை, செந்துறை குரும்பபட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து யாகவேள்வி, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கஞ்சி கலய ஊர்வலம் தொடங்கியது. செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயத்தையும், முளைப்பாரியையும் தலையில் சுமந்துகொண்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக அய்யப்பன், கருப்பசாமி, முத்தாலம்மன், சந்தைப்பேட்டை விநாயகர், முருகன் மற்றும் குரும்பபட்டி மகாலட்சுமி கோவிலுக்கு ஊர்வமாக சென்றனர்.இதையடுத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் அங்கு கஞ்சிக்கலயங்களை வேப்பிலை போர்வையில் அடுக்கி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இதற்கான ஏற்பாடுகளை செந்துறை குரும்பபட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றக் குழுவினர் செய்திருந்தனர்.