Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலபைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை! கோவிலில் சுரங்கப்பாதை? கோவை அருகே பரபரப்பு! கோவிலில் சுரங்கப்பாதை? கோவை அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கோவிலில் மாலை சாற்ற கட்டணம் இல்லை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
11:02

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சுவாமிக்கு மலர் மாலை சாற்றுவதற்காக வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம், பக்தர்களின் வேண்டுகோள்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 4 கோடி ரூபாய் செலவில், திருப்பணி நடந்து வருகிறது. இப்பணிகள், கடந்த ஜூலை மாதம் துவக்கப்பட்டன. இப்பணிகளை, அறநிலையத் துறை ஆணையர் தனபால், கூடுதல் ஆணையர் ராஜா, இணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோர், நேற்று பார்வையிட்டனர். ஆய்விற்கு பின் ஆணையர் தனபால் கூறியதாவது: கோவிலில், வைகாசி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்றவாறு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு வருகிறோம். குத்தகை பாக்கி வைத்திருப்போர் நிலங்கள், ஆக்கிரமிப்பு வகையில் மீட்கப்படும்.

வெள்ளி கதவு: இக்கோவிலுக்கு சொந்தமான, 108 ஏக்கர் விவசாய நிலங்களை, முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இக்கோவில் வெள்ளி இருப்பிற்கு ஏற்றவாறு, முதல்வரின் அனுமதியுடன் கருவறை கதவிற்கு வெள்ளிக் கதவு அமைக்கப்படும். கோவிலில், சுவாமிக்கு மலர் மாலை சாற்றுவதற்கு வசூலிக்கப்படும், 1 ரூபாய் கட்டணம், பக்தர்களின் வேண்டுகோள்படி ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் திருக்கோவிலுக்கு, திருமடத்திற்கு கட்டளை வழங்கும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தலாம்.

புகார் செய்யலாம்...: காணிக்கைகளை உரியவரிடம் செலுத்தி, கையொப்பத்துடன் கூடிய ரசீது தவறாது பெற்றுக் கொள்ள வேண்டும். ரசீது அளிக்க மறுத்தால், புகார் தெரிவிக்கலாம் என, அலுவலக தொலைபேசி எண், செயல் அலுவலரின் கைபேசி எண், ஆகியவை தகவல் பலகையில் எழுதி வைக்கப்பட்டு உள்ளது. முறைகேடாக நடைபெறும் திருமணங்களுக்கு தடைவிதிக்கப்படும். பி.வி.களத்தூர் ராமர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இக்கோவில் ஆதீனம், கடந்த ஆண்டு சிவபேறு பெற்றார். அந்த பொறுப்பிற்கு, தகுதி வாய்ந்த ஆதீனத்தை முறையாக நியமிக்க வேண்டும், என, பொதுமக்கள் மனு கொடுத்தனர். காஞ்சிபுரம் உதவி ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியேர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்;தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகிய ... மேலும்
 
temple news
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 300 ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.கோவையின் ... மேலும்
 
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar