Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் ... காஞ்சி வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை காஞ்சி வேணுகோபால சுவாமி பஜனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில் பணியிடங்கள் காலி; அபிஷேக ஆராதனைகள் பாதிப்பு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோவிலில் பணியிடங்கள் காலி; அபிஷேக ஆராதனைகள் பாதிப்பு

பதிவு செய்த நாள்

11 செப்
2026
10:09

சென்னை: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அர்ச்சகர் மற்றும் கைங்கர்ய பணியிடங்களை நிரப்புவதில், அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காலதாமதம் செய்வது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், புகழ்பெற்ற ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ராவண வதத்திற்கு பின், ஸ்ரீ ராமர் சிவபெருமானை வழிபட்டு, தன் பாவங்களை போக்கிக் கொண்ட இடம். இக்கோவிலில் கடந்த 15 ஆண்டுகளாக, போதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படாததால், அபிஷேக ஆராதனைகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. போதிய அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டி தொடரப்பட்ட வழக்கில், ‘அர்ச்சகர்களை நியமிக்கலாம்’ என, கடந்த ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கோவில் நிர்வாகம், அர்ச்சகர் பணியிடங்களை நிரப்பாமல், கைங்கர்யம் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேருக்கு, குருக்களாக பதவி உயர்வு கொடுத்து, உத்தரவை திசை திருப்பியுள்ளது. அதன் பின் அர்ச்சகர்களை நியமிக்க, எந்த முன்னெடுப்பும் எடுக்காமல், தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால், அன்றாட பூஜைகள் செய்ய முடியாத நிலை உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.


இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது: ரமேஸ்வரம் கோவிலில், போதிய அர்ச்சகர்கள் இல்லாததால், காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னிதிகள் மற்றும் பல உப சன்னிதிகள் பூட்டி கிடக்கின்றன. சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளில், ஓரிரு அர்ச்சகர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். சாதாரண நாட்களில், 5,000 பக்தர்களும், சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்கள், அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில், 50 ஆயிரம் பக்தர்களும் வருகின்றனர். அப்போது, ஆள் பற்றாக்குறையால் கடும் சிரமம் ஏற்படுகிறது. அறநிலையத்துறை இணை ஆணையர் நேரடியாக பணி நியமனம் செய்ய அதிகாரம் இருந்தும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல், அர்ச்சகர் மற்றும் கைங்கரிய பணியிடங்களை, உடனே நேரடி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) மாலை யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் மன்னர்கள் பட்டம் சூட்டிய ‘கவுரி பீடத்தில்’ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஒக்கப்பிறந்தான் குளம் தெரு, வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் கிருஷ்ண ... மேலும்
 
temple news
உஜ்ஜைனியில் உள்ள அனுமனின் நின்ற கோலத்திலான சிலை தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. சாலை விரிவாக்கப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar