பதிவு செய்த நாள்
06
பிப்
2013
12:02
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய தியான மண்டபத்தில், இந்தியாவில் உள்ள, லத்தின் முறை கத்தோலிக்க ஆயர்களின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, ஆயர்கள் மாநாடு துவங்கியது.இந்திய கத்தோலிக்க சபையின் அருள் பணித் திட்டம் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டை, இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் டெப்போ துவக்கி வைத்தார்.இதில், இன்றைய சூழலில், ஆன்மிகம், கல்வி, சமூகப் பணி, மருத்துவப் பணி என, பல துறைகளில், கத்தோலிக்க சபை ஆற்றும் பணிகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர். 170 மறை மாவட்ட ஆயர்கள் பங்கேற்றனர்.மாநாடு, 10ம் தேதி வரை நடக்கிறது. நிறைவில், போப்பின் சிறப்பு தூதர் கர்தினால் பிலோனி, இந்திய தூதர் பொன்னாக்கியோ பங்கேற்று, வேளாங்கண்ணியில் புதிதாக கட்டிய, "விண்மின் தேவாலயத்தை திறந்து வைக்கின்றனர்.